poetry-1
தாய் இல்லை தந்தை இல்லை நான் ஒரு அனாதை ஊரில்லை உறவில்லை நான் ஒரு பொறம்போக்கு கைப்பிடிக்க உற்றார் இல்லை சொல்லித்தர ஆசான் இல்லை நான் ஒரு தான்தோன்றி கண்ணுக்கு எட்டிய வரை காப்பாற்ற ஆளில்லை நான் ஒரு தனி மரம் ஆம் தனிமரம் இருப்பினும் ………… என்னுள்ளும் சில புழு உண்டு பூச்சி உண்டு பறவைகள் உண்டு கூடு உண்டு குஞ்சு உண்டு என்னை நம்பியும் பல ஜீவன் உண்டு நான் தனி மரம் அல்ல………… நான் ஒரு ………………………………… சரணாலயம் k.s.kumar